Posts

Showing posts from September, 2025

சிந்தனை

 சிந்தனை 🧠 நம் வாழ்க்கையில் நம்முடைய உள்ளமும், நம் சிந்தனையும், நம் செயலும்,  நம் முயற்சியும், நம் பயிற்சியும்,  நமக்கான பாதையும்,  நம் பயணங்களும்,  நம் மீதுள்ள தன்னம்பிக்கையும், நம் உழைப்பும் 🎯 நம் இலக்கும் தெளிவாக இருக்குமானால் 🙌 நம்மை யாராலும் வீழ்த்த முடியாது. 📌 அதாவது திறமை என்பது பிறப்பிலேயே இறைவனால் நமக்கு கொடுக்கப்பட்டது. ஊமையாக இருந்து அதை வீணாக்கக் கூடாது. 🏅 புகழ் என்பது நாம் வாழும் வாழ்க்கையால் வருவது. 🚫 யாருக்கும் நாம் என்றும் அடிமையாகி விடக்கூடாது. ⚠️ ஆணவம் என்பது நம் அழிவுக்கான பாதை — அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். 🧼 இறுதியாக நம் மனம் தூய்மையாக இருந்தால் 🌈 நாம் செல்லும் வழியெல்லாம் வெற்றி நிச்சயம் தான். 🙏

முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?

 முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்? உடல் நலத்தோடும், பொருள் வளத்தோடும், சமுதாய நட்பு நலத்தோடும், உலக இன்பங்களைத் துய்த்தது போதும் என்ற மனநிறைவோடும் வாழ்வது முழுமை நலவாழ்வு.  உடலில் தணியாத நோயோடும், மனதில் பொருள்,புகழ், அதிகாரம், புலனின்பம், நான்கும் இன்னும் வேண்டும் எனக்கே வேண்டும் என்ற பேராசையோடும் வாழ்வது துன்பவாழ்வு. அறியாமையே துன்பத்திற்குக் காரணம்.தன்னையோ கடவுளையோ அறியாமல் வாழ்பவனே துன்பத்தில் வாழ்வான்.துன்பமில்லாமல் வாழ தன்னையும் கடவுளையும் ஒன்றாக அறியும் யோகக்கலையே மனவளக்கலை (Vethathiri SKY). உடலுக்கும், உயிருக்கும், மனத்திற்கும் யோகப்பயிற்சிகள் அளித்து,தன்னையும் கடவுளையும் ஒன்றாக அறிந்தவனுக்கு,  1)தான் தனது என்ற தன்முனைப்பு (ஆணவம் -EGO)அழிந்து சம உணர்வு மலரும்.  2)அனைத்துயிரும் ஒன்றென்று அறிந்த அடிப்படைகள் கடமைகளை ஆற்றும் அன்பும் கருணையும் ஊற்றெடுக்கும். 3)தனக்கும் பிறருக்கும் தீங்கு செய்யும்  பேராசை,சினம், கடும்பற்று, முறையற்ற பால்கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் ஆகிய ஆறு தீயகுணங்களும், தனக்கும் பிறருக்கும் நலம் செய்யும் ந...