இன்று ஓர் இனிய தகவல் 28/06/2021 திங்கட்கிழமை
தன்னம்பிக்கை வரிகள் ..!
பணக்கார இளைஞனின் விலை உயர்ந்த கார் நின்றுகொண்டிருந்தது.
ஏழைச் சிறுவன் ஒருவன், எட்டி நின்று அந்தக் காரையே ஆசையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
சிரித்துக்கொண்டே அந்த இளைஞன் சொன்னார், “இது என் அண்ணன் எனக்குப் பரிசளித்தது”.
சிறுவன் முகத்தில் வியப்பு.
“உனக்கு அப்படி ஓர் அண்ணன் இருந்திருக்கலாம் என்று ஆசைப்படுகிறாயா?” இளைஞர் கேட்டார்.
சிறுவன் சொன்னான் , ”இல்லை! அப்படியோர் அண்ணனாக வளர வேண்டுமென்று விரும்புகிறேன்”.
நம்பிக்கையுணர்வு நல்லெண்ணங்களையே வளர்க்கும் ....🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் ; கொரோனாவை ஓழிப்போம்💐💐💐💐💐💐💐வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக். செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை. 9443691344.
Comments
Post a Comment