வாழ்க்கை மலர்கள்: மார்ச் 4 மனதின் பத்துப் படிகள்

 வாழ்க்கை மலர்கள்: மார்ச் 4


மனதின் பத்துப் படிகள்


உடலை இயக்குவது உயிரின் வேலை. அதனைப் பாதுகாத்து, அணுஅடுக்குச் சீர்குலையாமல் தடை வரும் போது, அதை உணரும் போது மனமாக விரியும் போது, உணர்ந்த தடையை நீக்க முயல்வது உயிரின் இரண்டாவது வேலையாகும். தடையால் உணர்ச்சி ஏற்படவே அதனைப் போக்க பொருள் அல்லது சூழ்நிலை அல்லது நட்பு வேண்டும். அப்போது தேவை உருவாகிறது. உணர்ச்சியாக மாறி நிற்பதும் தேவையாக எழுந்து நிற்பதும் உயிர்தான்.


தேவை ஏற்படவே அதைச் சமன் செய்ய – முயற்சி தோன்றுகிறது. முயற்சியின் காரணமாகச் செயல் மலர்கிறது. செயலானது இயற்கை ஒழுங்கமைப்பின்படி விளைவு தருகிறது. விளைவை உயிரானது அனுபோகம் ஆகப் பெறுகிறது. அனுபோகத்திலிருந்து இன்ன செயல் செய்தால் இன்ன விளைவு வரும். அதனால் இன்ன அனுபவத்தைப் பெறலாம் என்ற அனுபவத்தை உயிர் பெறுகிறது.


உயிர் மேற்கொள்ளும் ஆராய்ச்சி, அதன்பின் இன்னவிதமான சூழ்நிலையில் இன்னவிதமான உணர்ச்சி தோன்றியதனால் இன்ன விதமாகச் செயல்பட வேண்டும் என்று ஒரு தெளிவினைப் பெறுகிறது. இறுதியாக எல்லாவற்றையும் தொகுத்து ஒரு முடிவினையும் உயிர் செய்து வைத்துக் கொள்கிறது. எனவே, உயிரே உணர்ச்சி, தேவை, முயற்சி, செயல், விளைவு, அனுபோகம், அனுபவம், ஆராய்ச்சி, தெளிவு, முடிவு என்ற பத்துக் கட்டமாக உயர்ந்து படர்ந்து நிற்கிறது.


எனவே, உயிரினது படர்கை நிலை ஆற்றல் தான் மனம். ஆங்கிலத்தில் Psyshic extension of the life energy is mind எனலாம். உடல் வரையில் இன்ப துன்ப அனுபோகங்களில் குறுகி நில்லாமல் ஆன்மா பற்றியும், இறைவனைப் பற்றியும் ஆராய உயரும் நிலையில் இந்த மனத்தையே அறிவு என்கிறோம்.


- அருட்தந்தை வேதாத்திரி மகரிசி

    K.Pudur MVKM Trust, Madurai - www.facebook.com/vethathiri.gnanam

    🔔 ▶️ www.youtube.com/SkyVethathiriyaGnanakkudil 🔔

Comments

Popular posts from this blog

நேர்மறை சுய பேச்சு பயிற்சிக்கான 10 வழிகள்

முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?

சிந்தனை