இன்று ஓர் இனிய தகவல் 04/01/2022 செவ்வாய்க்கிழமை
இன்று ஓர் இனிய தகவல் 04/01/2022 செவ்வாய்க்கிழமை 🍀🍀🍀🍀🍀🍀 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹
*அன்பு யாதெனில்*
உன்னைக் காயப்படுத்தாது
உன்னைக் கண் கலங்க விடாது
உன்னை உதாசீனப்படுத்தாது
உன்னைக் காலம் தோறும் காத்திருக்க வைக்காது
உன்னை ஒருபோதும் விட்டு விட நினைக்காது
நீ கண்ணீர் விடுவதைக் கண்டால் அதுவும் கண்ணீர் விடும்.
இதுவே காதல் சொல்லும் அன்பு.
இந்த அன்பிடம் எதைக் கேட்டாலும் கேட்பதைக் கொடுத்து உன்னை சந்தோசப்படுத்தும்
மாறாக இப்போதெல்லாம்
கண்ணீருக்குக் காரணமானவர்களுக்காகவே கண்ணீர் சிந்துவது
உதாசீனப்படுத்துபவர்களையே தேடிச் செல்வது
காயப்படுத்துபவர்களிடமே மன்றாடி நிற்பது என அன்பே இல்லாதவர்களிடம் மண்டியிட்டு நின்று அன்பைக் கேட்டால் இல்லாத ஒன்றை எங்கிருந்து தருவார்கள்.
கவலைகள் உனக்குச் சொந்தமானதல்ல.
காலங்கள் உனக்காகக் காத்திருப்பதுமல்ல
ஒரு முறை கவலைப்படு
மறுமுறை சிந்தனை செய்
முடிந்த வரை முயற்சி எடு
காலங்கள் சேர்ந்து வந்து மறைத்திடுமே உன் கவலைகளை நன்று. வெற்றி நிச்சயம்
👍👍👍👍👍👍👍 *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே** 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.
Comments
Post a Comment